மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  15

படிக்கும் பயிற்சியில் மேலும்  ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

[1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.



கல்வெட்டின் பாடம்:

  1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
  2. லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
  3. த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
  4. எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
  5. சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
  6. பெரியதிருமண்டபமுன்...டுப்பு ஜீ(ர்)
  7. நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
  8. த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
  9. அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
  10. யகம் செய்துநின்ற யசிங்ககுல கா
  11. வளநாட்டு குளமங்கல நாட்டு சா
  12. மங்கலத்து சாத்தமங்கலமுடை
  13. ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
  14. டன் விரதங்கொண்டு செய்தார் இ
  15. (ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
  16. (ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
  17. யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
        ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

[2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:


கல்வெட்டின் பாடம்:

1.       இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
2.       ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
3.       . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
4.       சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

[3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:


கல்வெட்டின் பாடம்:


  1. கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 வி. இ
  2. நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும் க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
  3. சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
  4. டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
  5. ணை சாத்திவருவோம்மாகவும்
குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


-----------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக