மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 24 ஜூலை, 2015

            தமிழ் பிராமி எழுத்துகள் - அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில்

”தி இந்து”  தமிழ் நாளிதழில், சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் நடந்துகொண்டிருக்கிற அகழாய்வில் கிடைத்த ஒரு பானை ஓட்டில் தமிழ் பிராமி எழுத்தில் “டிசன்” என்று எழுதியுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. சங்ககாலப்பானையில் “டி” என்னும் எழுத்தில் ஒரு சொல் தொடங்க வாய்ப்பில்லை என்னும் நோக்கில் பானை ஓட்டில் இருக்கும் எழுத்தினைப் படித்தேன். நான் நினைத்தது சரியாக அமைந்தது. பிராமி எழுத்தின் மெய்யான வடிவம் “திஸன்” என்பதேயாகும். நாளிதழில் பிழையாக “டிசன்” எனக்குறிப்பிட்டுவிட்டார்கள். 





விளக்கத்துக்கு இத்துடன் இணைத்திருக்கும் (“Paint picture “ ) படத்தைப் பார்க்க.



----------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

3 கருத்துகள்: